Hot News
Home » செய்திகள் » ஜனாதிபதிக்கும்,நாமலுக்கும் மங்கள சமரவீர வீட்டில் விருந்துபசாரம்!

ஜனாதிபதிக்கும்,நாமலுக்கும் மங்கள சமரவீர வீட்டில் விருந்துபசாரம்!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரது மகன் நாமல் ராஜபக்ஷவும் மங்கள சமரவீரவின் வீட்டுக்கு சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வாரம் மொரட்டுவையில் அமைந்துள்ள மங்களவின் வீட்டுக்கு ஜனாதிபதியும் நாமலும் சென்றுள்ளனர்.

மங்கள சமரவீரவின் நெருங்கிய அரசியல் சகாவான ருவான பெர்னன்டஸ் மங்களவின் உறவினரான மானெல் மற்றும் நெருங்கிய சகவான சமிர என்பவரும் இதன் போது வீட்டில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

ரணில்,சந்திரிக்கா ,கரு ஜயசூரிய போன்றவர்கள் தொடர்பில் மங்கள சமரவீர கூறிய நகைச்சுவைகளை கேட்டு ஜனாதிபதியும் நாமலும் வயிறு குழுங்க சிரித்தனர்.

இந்த சந்திப்பின் போது ஜனாதிபதிக்கும் நாமலுக்கும் மங்கள சமரவீர சிறந்த விருந்துபசாரம் ஒன்றை வழங்கியுள்ளார்.

சந்திப்பின் போது ஆளும் கட்சிக்கு தாவுவது தொடர்பில் எந்த விடயத்தையும் மங்கள ஜனாதிபதியுடன் பேசவில்லை.

விருந்துபசாரம் முடிந்து ஜனாதிபதி வாகனத்தில் ஏறி செல்லும் போது “எனது தகவலுக்கு இன்னமுமம் பதில் கிடைக்கவில்லை. நான் யாருடன் பேச வேண்டும்” என மங்கள கேட்டுள்ளார்.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுடன் இது குறித்து பேசுமாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பசில் ராஜபக்ஷவுடனான பேச்சுவார்த்தைகளில் இணைப்புப் பணிகளை மேற்கொள்ளும் பொறுப்பினை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் நெருக்கமான சகாக்களில் ஒருவரான மனோ தித்தவெல்லவிடம் மங்கள ஒப்படைத்துள்ளார் என சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

TELO Media Team 1