மன்னார் மாவட்ட வர்த்தகர் சங்கத்தினருக்கும் வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து, வர்த்தக வாணிபம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரனுக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
அமைச்சரின் ஏற்பாட்டில் நேற்று மாலை 2 மணியளவில் மன்னாரில் உள்ள உப அமைச்சு அலுவலகத்தில் குறித்த சந்திப்பு நடைபெற்றது.
குறித்த சந்திப்பின் போது, பண்டிகைக் காலத்தில் தென்னிலங்கையில் இருந்து வருகின்ற வியாபாரிகளால் தொடர்ந்து மன்னார் மாவட்ட வர்த்தகர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். எனவே குறித்தவிடயம் குறித்தும் வர்த்தகர்களும் அமைச்சரும் கலந்துரையாடினர்.
தொடர்ந்தும் எதிர்வரும் அண்டு தொடக்கத்தில் மன்னார் மாவட்ட வர்த்தகர் சங்கத்துக்கு ஒரு நிலையான கட்டிடம் அமைப்பதற்கான நிதியினை ஒதுக்குவது குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.