Hot News
Home » செய்திகள் » மைத்திரிபால சிறிசேனவின் சகோதரது லொறி மீது தாக்குதல்

மைத்திரிபால சிறிசேனவின் சகோதரது லொறி மீது தாக்குதல்

ஜனாதிபதி பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் சகோதரருக்கு சொந்தமான அசிரி லொறி ஒன்று தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது
“அரலிய சாஹ்ல்” நிறுவன உரிமையாளரான டட்லி சிறிசேனவின் லொறியே தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது

இந்த சம்பவம் தம்புள்ளை பகுதியில் உள்ள மகரான்டாகாமுல்ல என்ற இடத்தில் இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது
இது தொடர்பில் தகவல் அளித்துள்ள அரலிய சாஹ்ல் நிறுவனத்தின் பொதுமுகாமையாளரும் மைத்திரிபால சிறிசேனவின் மற்றும் ஒரு சகோதரருமான லால் சிறிசேன தமது லொறிää ஆயுதக்குழு ஒன்றின் தாக்குதலுக்கு உள்ளானதாக தெரிவித்தார்

இந்த தாக்குதலின் பின்னணியில் முக்கிய அமைச்சர் ஒருவர் இருப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்
அரலிய சாஹ்ல் நிறுவனத்தின் உரிமையாளரான டட்லி சிறிசேன அண்மையில் அமைச்சர் ஜோன்ஸ்ட்டனின் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருந்தார்

டட்லி சிறிசேன, நாட்டில் அசிரி மாபியா நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அமைச்சர் பெர்ணான்டோ குற்றம் சுமத்தியிருந்தார்.
இதேவேளை அமைச்சர் ஜோன்ஸ்டனின் அமைச்சு இறக்குமதி அரிசியை குறைந்த விலைகளில் தற்போது தேர்தலை முன்னிட்டு விநியோகித்து வருகின்ற நிலையிலேயே இந்த தாக்குதல் சம்பவமும் இடம்பெற்றுள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

TELO Media Team 1