எதிர்வரும் சனிக்கிழமை(பெப்ரவரி6) இலங்கை வரவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் செய்ட் அல் ஹ_சைன், வடக்குக்கும் விஜயம் செய்யவுள்ளார்.
இதன்போது அவர் வடக்கில் இறுதிப்போர் இடம்பெற்ற இடங்களை பார்வையிடும் அவர் போரினால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களையும் சந்திக்கவுள்ளார்.
இந்தநிலையில் எதிர்வரும் 9ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் ஆணையாளர் அன்றைய தினம் செய்தியாளர் சந்திப்பு ஒன்றையும் நடத்தவுள்ளார்.
இந்த விஜயத்தின்போது ஐக்கிய நாடுகள் பரிந்துரை தொடர்பில் நடைமுறைப்படுத்தல்களை அரசாங்கம் அவருக்கு தெளிவுப்படுத்தவுள்ளது.