கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த பெரு மழையினால் கடுகண்ணாவை பிரதேசத்தில் நிகழ்ந்த வெள்ளப் பெருக்காலும் மண் சரிவாலும் பாதிக்கப்பட்ட பல குடும்பங்கள் இறக்குவத்தை ரம்மலக்கா பள்ளிவாசலில் தற்காலிகமாக தங்கியுள்ளனர். இவர்களை சிவன் அறக்கட்டளை நிறுவனரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பிரச்சாரச் செயலாளருமான கணேஸ்வரன் வேலாயுதம், இன்று 19-05-2016 நேரில் சென்று பார்வையிட்டதோடு மட்டுமல்லாது அவர்களுக்கு உடனடித் தேவைக்கான நிதியுதவியினையும் வழங்கினர்.
ஒன்பது குடும்பங்களைச் சேர்ந்த ஐம்பதுக்கு மேற்பட்டவர்களுக்கு குடும்பம் ஒன்றிற்கு தலா 10000 ரூபாயினையும் அங்கு தங்கியிருந்த மீதிக் குடும்பங்களுக்கு தலா 5000 ரூபாயினையும் வழங்கினார்.
எம்மால் இச் செய்தி வெளியிடப்படும் இத்தருணத்தில் ரெலோவின் பிரச்சாரச் செயலாளர் கணேஸ்வரன் நேற்று முன்தினம் பாரிய மண்சரிவு நிகழ்ந்து 200 க்கு மேற்பட்டவர்கள் காணமற் போயுள்ளதாக தெரிவிக்கப்படும் மாவனல்ல, அரக்கநாயக்க பிரதேசத்துக்கு விஜயம் செய்து அங்குள்ள பௌத்த விகாரை ஒன்றில் தங்கியுள்ள மக்களுக்கும் உடனடித் தேவைகளுக்கான நிதியுதவியினை வழங்குகின்றார்.
இந் நிகழ்வுபற்றிய மேலதிக விபரங்களை பின் அறியத் தருகின்றோம்.