Hot News
Home » செய்திகள் » தனிப்­பி­ராந்­தி­ய­மா­கச் செயற்­பட ஆரம்­பித்­துள்­ளது வட­மா­கா­ணம்

தனிப்­பி­ராந்­தி­ய­மா­கச் செயற்­பட ஆரம்­பித்­துள்­ளது வட­மா­கா­ணம்

வடக்­கில் முத­ல­மைச்­சர் சி.வி.விக்­கி­னேஸ்­வ­ரன் எதைப் பேசி­னா­லும் அவ­ருக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­வ­தில்லை. வடக்கு தனி­யொரு பிராந்­தி­ய­மா­கச் செயற்­பட ஆரம்­பித்­துள்­ளது.

இவ்­வாறு பொது­ப­ல­சேனா அமைப்­பின் செய­லர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் தெரி­வித்­தார்.

அநு­ரா­த­பு­ரத்­தில் நேற்று நடை­பெற்ற மக்­கள் சந்­திப்­பி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­யுள்­ளார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

தற்­கா­லத்­தில் இலங்­கை­யில் பல அர­சி­யல் தலை­வர்­கள் இருக்­கின்­றார்­கள். எந்­த­வொரு நாட்­டுக்கோ அல்­லது நிறு­வ­னத்­துக்கோ ஒழுங்­கான தலை­மைத்­து­வ­மொன்று இல்­லா­த­போது அந்த நாடும் நிறு­வ­ன­மும் அழிந்து போய்­வி­டும்.

இன்று இலங்­கை­யி­லும் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வு­டன் மேலும் பல தலை­வர்­க­ளும் உள்­ள­னர்.

தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வும், அமைச்­சர்­க­ளான ராஜித சேனா­ரத்­ன­வும், மங்­கள் சம­ர­வீ­ர­வும் நாட்­டின் தலை­வர்­கள் போலத்­தான் இருக்­கின்­றார்­கள்.

மறு­மு­னை­யில் வடக்­கில் விக்­னேஸ்­வ­ரன் எதைப் பேசி­னா­லும் அவ­ருக்கு எதி­ராக வழக்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­வ­தில்லை. வடக்கு தனி­யொரு பிராந்­தி­ய ­மாக மாறி­யுள்­ளது என்­றார்.

TELO Media Team 1