Hot News
Home » செய்திகள் » தமிழ்த் தேசிய அரசியலை பிளவுபடுத்தும் கட்சிகளுடன் `ரெலோ` ஒன்றிணைந்து செயற்படாது

தமிழ்த் தேசிய அரசியலை பிளவுபடுத்தும் கட்சிகளுடன் `ரெலோ` ஒன்றிணைந்து செயற்படாது

தமிழ்த் தேசிய அரசியலை பிளவுபடுத்தும் கட்சிகளுடன் ரெலோ ஒன்றிணைந்து செயற்படாது என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அரசியல் கருத்தாடல் நிகழ்வு ஒன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை (22) வவுனியாவில் நடைபெற்றது.

அது தொடர்பில் எமது செய்தித்தளத்துக்கு (http://www.telo.org) கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்குறித்த கருத்தை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினை அரசியல் ரீதியான தீர்வை காண்பதற்கு தமிழ்த் தேசியக் கொள்கையுடைய அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும். அதேநேரம் தமிழ்த் தேசிய அரசியலை பிளவுபடுத்தும் கட்சிகளுடன் ரெலோ ஒன்றிணைந்து செயற்படாது எனக் குறிப்பிட்டார்.