இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லேவிற்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்குமிடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பு பிரதமர் அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றுள்ளது.
இதன்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் தொடர்பாக உரையாடப்பட்டதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.