Hot News
Home » செய்திகள் » மேஜர் சந்தன பிரதீப் இடமாற்றம்

மேஜர் சந்தன பிரதீப் இடமாற்றம்

இராணுவ நீதிமன்ற விசாரணையின்போது குற்றம் நிருபிக்கப்பட்ட இராணுவ புலனாய்வு அதிகாரி மேஜர் சந்தன பிரதீப் இராணுவ புலனாய்வு படைப்பிரிவிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக உத்தியோகப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.இவர் நிழல் படைப் பிரிவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி ஒருவர் டெய்லிமிரருக்கு தெரிவித்தார். அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மற்றும் மேஜர் சந்தன பிரதீப் இருவருக்கும் இடையில் கொழும்பு ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்றதாக கூறப்படும் முறுகல் நிலை தொடர்பில் ஆராய்ந்து இராணுவ புலனாய்வு விசாரணை நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட அறிக்கையை தொடர்ந்து இத்தீரமானம் எடுக்கப்பட்டுள்ளது.கொழும்பு ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தின்போது, மேஜர் சந்தன பிரதீப் தனக்கு வழங்கப்பட்ட துப்பாக்கியை சட்டவிரோதமாக பயன்படுத்தி தொழில் அதிபர் ஒருவருக்கு பாதுகாப்பு வழங்கினார் என மேற்படி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கொழும்பு தெற்குப் பகுதிக்கான இராணுவப் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரியாக மேஜர் சந்தன பிரதீப் செயற்பட்டு வந்தார்.

TELO Admin