விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர் ஒருவர், மொனராகல நீதிமன்றத்தில், தனது வயிறு மற்றும் கழுத்தை கூரிய ஆயுதத்தினால் கிழித்து தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார். நேற்று நடந்த இந்தச் சம்பவத்தை அடுத்து, காயமடைந்த சந்தேக நபர் சிறைக்காவலர்கள் மற்றும் காவல்துறையினரால், மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பைச் சேர்ந்த சந்தேக நபர் புத்தலவில் பேருந்து மீது கிளைமோர் தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டு கடந்த மூன்று ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார் இவர் மீது இன்னமும் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படாத நிலையில், ஒவ்வொரு மாதமும், நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு தடுப்புக்காவல் உத்தரவு நீடிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.