Hot News
Home » செய்திகள் » பிரான்சில் தமிழர்களின் நிரந்தர அரசியல் தீர்வு தொடர்பாக கலந்துரையாடல் – சீ.யோகேஸ்வரன் எம்.பிக்கு அழைப்பு

பிரான்சில் தமிழர்களின் நிரந்தர அரசியல் தீர்வு தொடர்பாக கலந்துரையாடல் – சீ.யோகேஸ்வரன் எம்.பிக்கு அழைப்பு

இலங்கைத் தீவில் தமிழர்களின் நிரந்தர அரசியல் தீர்வு தொடர்பான கலந்துரையாடலில் கலந்து கொள்வதற்காக பிரான்ஸ் அரச பாராளுமன்ற அழைப்பை ஏற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் பிரான்ஸிற்கு சென்றுள்ளதாக அவரது ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் சென்றுள்ள பாராளுமன்ற உறுப்பினர் வட- கிழக்கின் சம தள அரசியல் முன் எடுப்புக்கள், தமிழர்களின் தீர்வின் முக்கியத்துவம் பற்றி பிரான்ஸ் அரச பிரதிநிதிகளுக்கு விளக்கம் அளிக்க உள்ளதுடன் எதிர்கால பங்களிப்பு பற்றிய கலந்துரையாடல்களிலும் ஈடுபட உள்ளதாக ஊடகப் பிரிவு சுட்டிக் காட்டியுள்ளது.

TELO Admin