Hot News
Home » Blog @ta » ஆட்சிமாற்றத்தின் பின்னர் இந்திய மீனவர்களின் அத்துமீறல் அதிகரிப்பு: யாழ். மீனவர்கள் குற்றச்சாட்டு

ஆட்சிமாற்றத்தின் பின்னர் இந்திய மீனவர்களின் அத்துமீறல் அதிகரிப்பு: யாழ். மீனவர்கள் குற்றச்சாட்டு

இலங்கையில் ஆட்சி மாற்றம் உருவானதன் பின்னர் இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் அதிகரித்துள்ளதாக யாழ்.குடாநாட்டு மீனவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இது குறித்து கடற்படையினர் அசமந்தப் போக்கில் இருப்பதாகவும் தங்கள் முறைப்பாடுகளுக்கு செவிசாய்ப்பதில்லை எனவும் அவர்கள் குற்றம்சாட்டியிருக்கின்றனர்.

குறித்த விடயம் தொடர்பாக மக்கள் கூறுகையில்,

ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதற்கு முன்னதாக இந்திய மீனவர்களின் இழுவைப் படகுகள் (றோலர்) இலங்கை கடல் எல்லைக்குள் வருவதனை கடற்படையினர் ஒரு அளவுக்கு தடுத்தார்கள். மீனவர்களையும் கைது செய்திருந்தார்கள்.

ஆனால் தற்போது அவ்வாறான நடைமுறை இல்லை. நாங்கள் முறைப்பாடு கொடுப்பதற்குச் சென்றாலும் அதனை கடற்படையில் கருத்தில் எடுத்துக் கொள்கிறார்கள் இல்லை என அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

TELO Media Team 1