நாட்டில் வாழ்வது வெட்கப்பட வேண்டிய விடயமாக மாறக் கூடிய அபாயம் நிலவி வருவதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
மேல் மட்ட அரசியல்வாதிகள் மட்டுமன்றி நடுத்தர மட்ட மற்றும் கீழ்மட்ட அரசியல்வாதிகளும் ஒரே விதமாகவே பயணிக்கின்றனர்.
கஹாவத்தையில் தாயையும் மகளையும் கொலை செய்தமை, தங்காலையில் வெளிநாட்டு பெண் ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியமை, கட்டுவானவில் தாயையும் மகளையும் கொலை செய்தமை, தங்காலை மற்றும் அக்குரஸ்ஸ பகுதியில் சிறுமிகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியமை போன்ற சம்பவங்கள் நடுத்தர அரசியல்வாதிகளின் மேற்கொள்ளப்பட்டவை.
மேல் மட்ட அரசியல்வாதிகள் இந்த நாட்டை சுரண்டி சுரண்டி திகட்டிய பின்னர், அரசியல்வாதிகளுக்கு நாட்டு மக்களை சுரண்டுவது திகட்டாது.
அவ்வாறு உயர்மட்ட அரசியல்வாதிகள் நாட்டை சுரண்டி இறந்து போனால் இந்த நடுத்தரமட்டத்திலான அரசியல்வாதிகள் நாட்டை பொறுப்பேற்றுக் கொள்வார்கள்.
எனவே இந்தக் குற்றச் செயல்கள் தொடர்ச்சியாக இடம்பெறும். இது ஓர் ஆபத்தான நிலைமையாகும், இலங்கையில் வாழ்கின்றோம் என்று தெரிவிப்பதே வெட்கப்பட வேண்டிய விடயமாக மாற்றமடையும் என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
வத்தளை என்டேரமுல்ல பகுதியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.