Hot News
Home » செய்திகள் » குழப்பங்களை விளைவிக்கும் நபர்கள் எந்த நேரத்திலும் ஆளும் கட்சியை விட்டு விலகிச் செல்ல முடியும் – மஹிந்த

குழப்பங்களை விளைவிக்கும் நபர்கள் எந்த நேரத்திலும் ஆளும் கட்சியை விட்டு விலகிச் செல்ல முடியும் – மஹிந்த

ஆளும் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக பிரசாரம் செய்து வருவோருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கடும் எச்சரிக்கை விடுத்தள்ளார்.ஆளும் கட்சியைச் சேர்ந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் இவ்வாறு பிரசாரம் செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மாகாணசபைத் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் இவ்வாறான பிரசாரங்களை மேற்கொள்வது கண்டிக்கப்பட வேண்டியது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தின் போது ஜனாதிபதி, பகிரங்கமாக குறித்த நபர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குழப்பங்களை விளைவிக்கும் நபர்கள் எந்த நேரத்திலும் ஆளும் கட்சியை விட்டு விலகிச் செல்ல முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

TELO Admin