ஊடகவியலாளர் பிரகித் எக்னெலிகொட காணாமல் போன சம்பவத்திற்கு பின்னால் செயற்பட்டவர்கள் தொடர்பில் இதுவரையில் பல தகவல்களை சேகரித்துள்ளதாக இரகசிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த காணாமல் போன சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 11 பேருக்கு, மேலதிகமாக மேலும் பலரிடம் வாக்குமூலம் பெற்றுகொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன் எக்னெலிகொடவுடன் நெருக்கமாக செயற்பட்டு அவரை கிரிதலை முகாமிற்கு அழைத்து சென்று கிரிதலை முகாமில் தடுத்து வைத்திருந்தமை மற்றும் அந்த முகாமில் குறித்த காலக்கட்டத்தில் செயற்பட்ட இராணுவப் பிரிவுகளுக்கு பொறுப்பாக இருந்தவர்கள், அவரை அழைத்து சென்ற வாகனத்திற்கான நபர்கள், குறித்த புலனாய்வு பிரிவில் செயறபட்ட அதிகாரிகள் உட்பட மேலும் பொறுப்பு கூற வேண்டிய பலரிடம் வாக்குமூலம் பெற்றுகொள்ளப்படவுள்ளது.
கடந்த காலங்களில் அவ்வாறு வாக்குமூலம் பெற்றகொள்ளப்பட்ட சில நபர்களிடம் இருந்து பல தகவல்களை பெற்றுகொள்ள முடிந்துள்ளது.
அவ்வாறு பெற்றுகொள்ளப்பட்ட தகவல்களை உறுதி செய்து கொள்வதற்காக மேலும் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.