Hot News
Home » செய்திகள் » கிளிநொச்சியில் கொள்ளையர்கள் பொதுமக்களால் பிடிக்கப்பட்டனர்

கிளிநொச்சியில் கொள்ளையர்கள் பொதுமக்களால் பிடிக்கப்பட்டனர்

கிளிநொச்சியில் பல வீடுகளை உடைத்துக்கொள்ளையில் ஈடுபட முனைந்தார்கள் என்ற குற்றச்சாட்டின்பேரில் ஆயுததாரிகள் சிலர் பொதுமக்களால் பிடிக்கப்பட்டனர்.
6பேரைக்கொண்ட இந்தக்குழுவினர் கத்தி மற்றும் வாள்களை கொண்டு வைஎம்சிஏ குடியிருப்பு பிரதேசத்துக்குள் இன்று காலை மூன்று மோட்டார் சைக்கிள்களில் சென்றுள்ளனர்.
எனினும் பொதுமக்கள் உடனடியாக ஒன்றிணைந்து அவர்களை சுற்றிவளைத்து பிடித்தனர்.
இதன்போது குழுவில் சென்ற நால்வர் பிடிக்கப்பட்டபோதும் இருவர் தப்பிச்சென்றுவிட்டனர்.
பிடிக்கப்பட்டவர்கள்ää கயிற்றால் கட்டப்பட்டு பின்னர் பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டனர்.

TELO Media Team 1