Hot News
Home » செய்திகள் » அவுஸ்திரெலியாவில் இலங்கையர்கள் விடுதலை

அவுஸ்திரெலியாவில் இலங்கையர்கள் விடுதலை

அவுஸ்திரேலியாவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலாக இருந்தனர் என்ற அடிப்படையில் 3 வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 5 இலங்கையர்கள் விடுவிக்கப்படவுள்ளனர்.

இதற்கான அனுமதியை அவுஸ்திரெலிய அரசாங்கம் வழங்கியுள்ளது
இதனையடுத்து அடுத்த வாரத்தில் நீதிமன்றத்தில் குறித்த வழக்கு விசாரணைக்கு வரும் போது 5 இலங்கையர்களும் விடுவிக்கப்படுவர் என்று அவுஸ்திரேலிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

விடுவிக்கப்படவுள்ளர்களில் தடுப்பின் போது பிறந்த குழந்தை ஒன்றும் அடங்குகிறது.

இதேவேளை இவர்கள் அவுஸ்திரேலிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை என்று அவுஸ்திரேலிய பிராந்திய காவல்துறையினர் நேற்று முன்தினம் அந்த நாட்டின் அரசாங்கத்துக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர்

TELO Media Team 1