Hot News
Home » செய்திகள் » இலங்கையுடன் உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள குர்திஸ்தான் விருப்பம்

இலங்கையுடன் உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள குர்திஸ்தான் விருப்பம்

இலங்கையுடனான உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள விரும்புவதாக குர்திஸ்தான் பிராந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. குர்திஸ்தான் பிராந்தியத்தில் இலங்கை அதிகாரபூர்வமாக கொன்சோல் காரியாலயமொன்றை ஆரம்பித்துள்ளது. இது இலங்கையின் 38ம் வெளிநாட்டுப் பிரதிநிதி அலுவலகம் என்பது குறிப்பிடத்தக்கது. குர்திஸ்தானுக்கான இலங்கை கொன்சோல் நாயகமாக அஹமட் ஜலாலுதீன் முஸ்தபா கடயைமாற்றுகின்றார்.

ஜலாலுதீன் முஸ்தபா, குர்திஸ்தான் வெளிவிவகார திணைக்களத்தின் தலைவரை அண்மையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.