Hot News
Home » செய்திகள் » தமிழ் மக்கள் பேரவை தேர்தலை தொடர்பில் ஆராய நேற்றுக் கூடியது

தமிழ் மக்கள் பேரவை தேர்தலை தொடர்பில் ஆராய நேற்றுக் கூடியது

ஜனாதிபதித் தேர்தலை தமிழ் மக்கள் எவ்வாறு கையாள வேண்டும் என்பது தொடர்பில் பொதுக் கலந்துரையாடலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆராய தமிழ் மக்கள் பேரவை மத்திய குழு நேற்று (22) கூடி ஆராய்ந்தது.

தமிழ்த் தேசிய அரசியற் பரப்பில் செயற்பட்டுவரும் அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளுடனும், பொது அமைப்புகளுடனும் கலந்துரையாடி ஜனாதிபதித் தேர்தல் குறித்து ஒருமித்த முடிவை எடுப்பதற்கான முயற்சியில், சமய பெரியார்கள், சமூகப் பெரியார்கள் மற்றும் புலமையாளர்களை உள்ளடக்கிய குழு ஒன்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இக்குழு, விரைவில் சந்திப்புகளை நடத்தி ஒருமித்த கருத்தை ஏற்படுத்தி அதனடிப்படையில் தமிழ் மக்களை வழிநடத்துவது என முடிவு எட்டப்பட்டது.