ஜனவரி 2, 2006 ஆம் ஆண்டு திருகோணமலைக் கடற்கரையில் கொலைவெறிபிடித்த சிங்களப் படைகளால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களின் 15ம் ஆண்டு நினைவஞ்சலி , இன்று ஜனவரி 2, 2021 இல் நினைவேந்தல் இடம்பெற்றது .
மனோகரன் ரஜீகரன்,யோகராஜா ஹேமசந்திரன் ,லோகித ராஜா ரோகன் , தங்கதுரை சிவநாதன்,சண்முகராஜா கஜேந்திரன் ஆகிய மாணவர்களே சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
இதேவேளை. மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 13 படையினருக்கு எதிரான குறிப்பிட்ட வழக்கை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு போதிய ஆதாரங்கள் இல்லை என திருகோணமலை பிரதான நீதவான் முகமட் ஹம்சா அறிவித்துள்ளார்.
இதனடிப்படையில் சிறீலங்காவின் நீதித்துறை 12 விசேட அதிரடிப்படையினர் அடங்கிய சந்தேகநபர்கள் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஆழ்ந்த அனுதாபங்கள் ஆத்மா சாந்திக்கு இறைவனை பிரார்த்திப்போம்.