இந்திய வௌிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள நிலையில், இலங்கைக்கான சீன தூதுவர் Qi Zhenhong இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ராலை நேற்று (04) சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
கொழும்பு துறைமுக நகரம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் உள்ளிட்ட பாரிய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும், பொருளாதார ஒத்துழைப்புகளை மேம்படுத்துவது தொடர்பிலும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டதாக கொழும்பிற்கான சீன தூதரகத்தின் ட்விட்டர் செய்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பில் முதலீடு, வர்த்தகம் மற்றும் சுற்றுலாத்துறை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ராலின் ட்விட்டர் செய்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.