Hot News
Home » செய்திகள் » மன்னாரில் மூன்று மனித எலும்புக்கூடுகள் இன்றும் மீட்கப்பட்டன!

மன்னாரில் மூன்று மனித எலும்புக்கூடுகள் இன்றும் மீட்கப்பட்டன!

மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணத்தின் உத்தரவிற்கமைவாக 11 வது தடவையாக மன்னார் நீதவான் மற்றும் அனுராதபுர சட்ட வைத்திய நிபுணர் டி.எல்.வைத்திய ரெட்ண ஆகியோர் முன்னிலையில் மனித புதைகுழி தோண்டப்பட்டது.

முதலில் ஏற்கனவே கண்டு பிடிக்கப்பட்டிருந்த மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டதோடு பரிசோதனைகளுக்காக குறித்த புதைகுழியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட மனித எலும்புக்கூட்டின் பாகங்கள் எடுக்கப்பட்டு 4 பெட்டிகளில் பொதி செய்யப்பட்டுள்ளன

இதனைத் தொடர்ந்து ஏற்கனவே தோண்டப்பட்ட புதைகுழியின் ஒரு பகுதி மேலும் தோண்டப்பட்ட போது இன்று மேலும் மூன்று மனித எலும்புக்கூடுகள் உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை குறித்த மனித புதைகுழி 1/2 மீற்றருக்கு விரிவு படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு நாளை மீண்டும் மனித புதைகுழி நீதவான் முன்னிலையில் தோண்டப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

திருக்கேதீஸ்வரம் புதைகுழியிலிருந்து இன்று வரை 43 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

TELO Media Team 1