மாகாணசபைக்கு இருக்கும் அதிகாரங்களை பறித்து மத்திய அரசாங்கத்தின் கீழ் இருக்கும் பொருளாதார அமைச்சுக்கு வழங்கும் திவிநெகும என்ற சட்ட மூலம் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஷ் ஆளும் கட்சிக்கு ஆதரவளித்ததன் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.மகிந்த ராசபக்ச அரசின் அற்பசொற்ப சலுகைகளுக்கும், பணத்திற்காகவும் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஷ் கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் முஸ்லீம் மக்களுக்கு மிகப்பெரிய துரோகத்தை செய்துள்ளது. கிழக்கு மாகாணத்தில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்தை மேற்கொள்வதற்கும் கிழக்கில் தமிழ் முஸ்லீம்களை சிறுபான்மையினராக்குவதற்கும் சிறிலங்கா அரசு செய்யும் அத்தனை சதி வேலைகளுக்கும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஷ் பெருந்தொகை பணத்தை வாங்கிக்கொண்டு துரோகத்தனத்தை செய்யப்போகிறது என்பதற்கு இது ஒரு முதற்படியாகும்.கிழக்கு மாகாண சபையில் இன்று சமர்பிக்கப்பட்ட இந்த சட்ட மூல ஆவணம் மேலதிக 6 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்ட மூல ஆவணத்திற்கு ஆதரவாக 21 வாக்குகளும் எதிராக 15 வாக்குகளும் பெறப்பட்டன.ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் கூட்டு சேர்ந்துள்ள முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தேசிய சுதந்திர முன்னணி என்பன பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தன.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி என்பன பிரேரணைக்கு எதிராக வாக்களித்தன.