Hot News
Home » செய்திகள் » வல்வெட்டித்துறை நகரசபை தலைவருக்கெதிராக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை வெற்றி

வல்வெட்டித்துறை நகரசபை தலைவருக்கெதிராக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை வெற்றி

வல்வெட்டித்துறை நகரசபை தலைவருக்கெதிராக அவரது கட்சியினரால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்;லா பிரேரணை இன்று வெற்றிபெற்றுள்ளது. நகரசபை தலைவர் ந.ஆனந்தராஜிற்கு எதிராக அவரது கட்சியான தமிழ் தேசியக்கூட்டமைப்பு அங்கத்தவர்கள் ஒன்றிணைந்து நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை இன்று கொண்டுவந்திருந்தனர். இப்பிரேரணை மீதான வாக்களிப்பின் போது அவருக்கு எதிராக நான்கு கூட்டமைப்பு உறுப்பினர் வாக்களித்தனர்.ஆதரவாக இருவர் மட்டுமே வாக்களித்திருந்தனர்.பல்வேறு குற்றச்சாட்டுக்களை  முன்னிறுத்தியே நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்பட்டிருந்தது. ஏதிராக வாக்களித்தவர்களுள் பிரதி தலைவர் சதீஸ் மற்றும் உறுப்பினர்களான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் தமிழரசு கட்சி நிர்வாக செயலாளர் எக்ஸ்.குலநாயகம் ஆகியோர் எதிராக வாக்களித்தனர். எதிர்கட்சியான பொதுசனஜக்கிய மக்கள் முன்னணியின் இரு உறுப்பினர்களும் வாகக்ளிப்பில் கலந்து கொள்ளவில்லை.

TELO Admin