இந்தியாவின் தேசப் பிதா மகாத்மா காந்தியின் 143ஆவது பிறந்த தினம் இன்று செவ்வாய்கிழமை யாழில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டது.அகில இலங்கை காந்திசேவா சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள காந்தியின் உருவச்சிலையடியில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.இன்று காலை 10 மணிக்கு காந்தியின் உருவச்சிலைக்கு அகில இலங்கை காந்திசேவா சங்கத்தின் தலைவரும் முன்னாள் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபருமான இராசநாயகம் மற்றும் தாதியர் பயிற்சிக்கல்லூரி அதிபர் ஆகியோர் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இந்த நிகழ்வில் அகில இலங்கை காந்திசேவா சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் தாதியர் பயிற்சிக்கல்லூரி மாணவர்கள், நலன்விரும்பிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.