Hot News
Home » செய்திகள் » நீதிமன்றில் ஆஜராகுமாறு அமைச்சர் ரிசாட்டிற்கு உத்தரவு

நீதிமன்றில் ஆஜராகுமாறு அமைச்சர் ரிசாட்டிற்கு உத்தரவு

நீதிமன்றில் ஆஜராகுமாறு அமைச்சர் ரிசாட் பதியூதீனுக்கு மன்னார் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.எதிர்வரும் 28ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு அமைச்சருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மன்னார் நீதிமன்றின் முன்னாள் நீதவான்; ஜுட்சனை அச்சுறுத்தியதாக அமைச்சர் பதியூதீனுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.இந்த வழக்கை விசாரணை செய்வதற்காக நீதிச் சேவை ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்ட விசேட நீதவான் ஜூட் ரங்க திசாநாயக்க, அமைச்சரை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளார். இதேவேளை மன்னார் நீதிமன்றிற்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த 6 சந்தேக நபர்கள் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

TELO Admin