Hot News
Home » செய்திகள் » நீதிமன்ற சேவை ஆணைக்குழுவின் செயலாளர் மீது குண்டர் குழு தாக்குதல்!

நீதிமன்ற சேவை ஆணைக்குழுவின் செயலாளர் மீது குண்டர் குழு தாக்குதல்!

நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் மஞ்ஜுல திலகரத்ன மீது குண்டர் குழுவொன்று தாக்குதல் நடத்தியுள்ளது.தாக்குதலில் காயமடைந்த மஞ்ஜுல திலகரத்ன தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கல்கிஸ்ஸ சென்.தோமஸ் வித்தியாலத்திற்கு அருகில் வைத்து நான்கு பேர் கொண்ட குண்டர் கும்பலொன்று அவர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளது.குண்டர் கும்பல், மஞ்ஜுல திலகரத்னவைத் தாக்கிவிட்டு அவரது கையடக்கத் தொலைபேசியையும் பறித்துச் சென்றுள்னர்.நீதிச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் கடந்த நாட்களில் அரசாங்க உயர்மட்டத் தரப்பினரின் பலத்த விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்தார்.நீதிச் சவை ஆணைக்குழுவின் பணிகளுக்கு அதிகாரத்திலுள்ள தரப்பினர் பாரிய அழுத்தங்களைக் கொடுத்து வருவதாக அவர் அண்மையில் வெளியிட்டிருந்த ஊடக அறிக்கையொன்றில் குறிப்பிட்டிருந்தமையும் நினைவூட்டத்தக்கது. இதுவே அரசாங்கத்தரப்பினர் நீதிச் சேவை ஆணைக்குழுவின் செயலாளரை விமர்சிக்க முக்கிய காரணமாக அமைந்தது.

TELO Admin