தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் அமரர் சு.ப. தமிழ்ச் செல்வனின் வீட்டில், தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் எனப்படும் கே.பி. குடியேறியுள்ளார்.கிளிநொச்சியில் அமைந்துள்ள இரண்டு மாடிக் கட்டடத்தில் குமரன் பத்மநாதன் இவ்வாறு குடியேறியுள்ளார்.குமரன் பத்மநாதன் நெர்நோடோ என்னும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தை வழிநடத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.கிளிநொச்சி திருவையாறு பகுதியில் அமைந்துள்ள இந்த வீட்டில் தமிழ்ச்செல்வன் தங்கியிருந்ததுடன், கட்டடடத்தின் ஒரு பகுதியை தனது அலுவலகமாகவும் தமிழ்ச் செல்வன் பயன்படுத்தியிருந்தார். இந்தக் கட்டடத்தின் கூட்ட அறையில் சுமார் 175 – 200 பேர் வரையில் ஒன்றாக அமரக் கூடிய இட வசதி காணப்படுகின்றது.