உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ இன்று பிற்பகல் 2.25 மணியளவில் ஸ்ரீலங்கன் விசேட விமானத்தில் குவைத்திற்கு விஜயம் செய்துள்ளார். குவைத்தில் நடைபெறும் ஆசிய கோப்ரேட் டயலொக் மாநாட்டில் கலந்து கொள்வதற்காகவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குவைத் சென்றுள்ளார்.இந்த விஜயத்தின் போது குவைத்தின் அரச பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதோடு 18ஆம் திகதி நாடு திரும்ப உள்ளதாக எமது விமானநிலைய செய்தியாளர் தெரிவித்தார்.