Hot News
Home » செய்திகள் » புனித ஹஜ் பெருநாளை 27ஆம் திகதி கொண்டாடுமாறு பெரிய பள்ளிவாசல் அறிவிப்பு

புனித ஹஜ் பெருநாளை 27ஆம் திகதி கொண்டாடுமாறு பெரிய பள்ளிவாசல் அறிவிப்பு

புனித ஹஜ் பெருநாளை எதிர்வரும் 27ஆம் திகதி கொண்டாடுமாறு கொழும்பு பெரிய பள்ளிவாசல் இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு அறிவித்துள்ளது.இன்று செவ்வாய்க்கிழமை (16.10.2012) ஹிஜ்ரி 1433 ஆண்டிற்கான துல்ஹஜ் மாதத்திற்கான பிறை இலங்கையில் தென்படவில்லை என்பதனாலே மேற்படி அறிவிப்பு கொழும்பு பெரிய பள்ளிவாசலினால் விடுக்கப்பட்டுள்ளது.ஹமீதிய்யா மண்ணடபத்தில் இன்று இடம்பெற்ற துல்ஹஜ் மாதத்திற்கான தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாட்டிலேயே, இலங்கை வாழ் முஸ்லிம்கள் புனித ஹஜ் பெருநாளை 27ஆம் திகதி கொண்டாட வேண்டுமென தீர்மானிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே ஹஜ் பெருநாள் ஒக்டோபர் 26ஆம் திகதி கொண்டாடப்படும் என அறிவிக்கபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

TELO Admin