தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் நேற்றய தினம் திங்கட்கிழமை(15-10-2012) அன்று இடம்பெயா்ந்துள்ள கேப்பாபிலவு மக்கள் அவா்களது விருப்பத்திற்கு மாறாகத் தங்கவைக்கப்பட்டுள்ள சீனியாமோட்டை பகுதிக்குச் சென்றிருந்தனா்.அங்கு தங்கியுள்ள குடும்பங்களைச் சோ்ந்த வறிய மாணவா்களுக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் கல்வி உபகரணங்கள் மற்றும் காலணிகள் வழங்கப்பட்டது.அத்துடன் அங்கவீனமடைந்தவா்கள் உட்பட போரால் பாதிக்கப்பட்டவா்களில் ஒருபகுதியினருக்கு நிதி உதவியும் வழங்கப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளா் செல்வராசா கஜேந்திரன், உபதலைவா்களில் ஒருவரும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவருமான இ.எ.ஆனந்தராஐா, தேசிய அமைப்பாளா் விஸ்வலிங்கம் மணிவண்ணன், இளைஞா் அணித் தலைவா் இ.கிருபாகரன் ஆகியோர் கலந்து கொண்டு மேற்படி உதவிகளை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனா்.