Hot News
Home » செய்திகள் » ‘வெற்றி கொள்ளையடிக்கப்பட்டிருக்காவிடின் ஜனாதிபதி முறை ஒழிக்கப்பட்டிருக்கும்’

‘வெற்றி கொள்ளையடிக்கப்பட்டிருக்காவிடின் ஜனாதிபதி முறை ஒழிக்கப்பட்டிருக்கும்’

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எமது வெற்றி கொள்ளை அடிக்கப்பட்டிருக்காவிடின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட்டிருக்கும் என முன்னாள இராணுவ தளபதி சரத் பொன்சேகா தெரிவித்தார். தேசிய பிக்கு முன்னணியின் ஏற்பாட்டில் கொழும்பு, ஹைட்பார்க் மைதானத்தில் இடம்பெற்ற மக்கள் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய பொன்சேகா மேலும் கூறியதாவது,  ‘அவர்கள் எம்மை பயமுறுத்தி, எமது குடும்பத்தினரையும் ஆதரவாளர்களையும் மிரட்டி எமது வெற்றியை கொள்ளையடிக்காதிருந்தால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட்டிருக்கும்.  வுப்ரைவில் வரக்கூடிய சாத்தியமுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கென பொருத்தமான ஒருவரை வளர்த்தெடுக்க வேண்டும்’ என அவர் மேலும் கூறினார்.

TELO Admin