முன்னாள் அமைச்சர் குமார வெல்கம காலமானார்!

முன்னாள் அமைச்சர் குமார வெல்கம தமது 74வது வயதில் காலமானார்.

கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை அவர் உயிரிழந்ததாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

இறுதிக் கிரியைகள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என குடும்பத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

குமார வெல்கமவுக்கு சுகயீனம் ஏற்பட்டமையினால் மூன்று மாத விடுமுறை வழங்குவதற்கு நாடாளுமன்றம் அங்கீகாரம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

1994ஆம் ஆண்டு அவர் நாடாளுமன்றில் அங்கம் வகித்தமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

ஆட்சி மாற்றம் காரணமாக பதவி விலக வேண்டியதில்லை – மத்திய வங்கி ஆளுநர்!

ஆட்சி மாற்றம் காரணமாக பதவி விலக வேண்டியதில்லை என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அரசாங்கமொன்று மாறியதற்காக சுயாதீனமாக செயற்படும் மத்திய வங்கி ஆளுநரும் நிதிச் சபையும் மாற வேண்டியதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிதிச் சபையின் உறுப்பினர்களது தனிப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் பதவி விலகலாம் எனினும் பொதுவாக அவ்வாறு பதவி விலக வேண்டிய அவசியமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புதிய மத்திய வங்கி சட்டத்தின் கீழ் நிதிச்சபை மற்றும் ஆணையாளர் குறிப்பிட்ட காலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பதவிக் காலத்தில் உச்ச அளவில் சேவையை வழங்கும் பொறுப்பு தமக்கு உண்டு என கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

வெளிநாடுகளில் இருந்து வரவழைக்கப்படவுள்ள அதிகாரிகள்! அநுரவின் அடுத்த அதிரடி!

இலங்கையின் வெளிநாட்டுத் தூதரகங்களில் கடமையாற்றும் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்களின் குடும்ப உறவினர்களை திருப்பி அழைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்த அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் அரசாங்கத்துக்கு நெருக்கமான முக்கியஸ்தர்களின் குடும்ப உறுப்பினர்கள் வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களில் முக்கிய பதவிகளில் அமர்த்தப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது, அரசியல் செல்வாக்கின் அடிப்படையில் எந்தவொரு நியமனத்தையும் வழங்குவதில்லை என்ற நிலைப்பாட்டில் உள்ளது.

அதன் காரணமாக போதிய தகுதிகள் இன்றி கடந்த காலங்களில் வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களில் அரசியல் செல்வாக்கின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட அதிகாரிகளைத் திருப்பியழைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் நாட்களில் அவர்கள் திருப்பி அழைக்கப்பட்டு, அந்த இடங்களுக்கு இராஜதந்திர துறையில் அனுபவம் வாய்ந்தவர்கள் நியமிக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.

Posted in Uncategorized

இடைக்கால பாதீட்டை நவம்பரில் கொண்டு வர புதிய அரசாங்கம் திட்டம்!

பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளமையால் 2025ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்கான இடைக்கால பாதீட்டினை புதிய நாடாளுமன்றம் கூடவுள்ள எதிர்வரும் நவம்பர் மாதத்தில் கொண்டு வருவதற்கு புதிய அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் பொருளாதார குழுவின் தலைவர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ இதனைத் தெரிவித்தார்.

அதேநேரம், 2025ஆம் ஆண்டுக்கான முழுமையான பாதீடு அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள திட்டங்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் எனவும் தேசிய மக்கள் சக்தியின் பொருளாதார குழுவின் தலைவர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

சொகுசு வாகனத்திற்கான 53 லட்சம் ரூபாய் நட்டஈட்டை செலுத்திய முன்னாள் எம்.பி

விபத்து இடம்பெற்று இரண்டு வருடங்களின் பின்னர் தான் பயன்படுத்திய சொகுசு வாகனத்திற்கான நட்டஈட்டை அண்மையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் செலுத்தியுள்ளார்.

இது தொடர்பில் விளக்கமளித்த மேல் மாகாண சபையின் செயலாளர் தம்மிக்க கே. விஜேசிங்க,

மேல் மாகாண சபைக்கு சொந்தமான சொகுசு வாகனத்தை பயன்படுத்திய போது விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஹான் பிரதீப் விதான கடந்த 24ஆம் திகதி மாகாண சபைக்கு 53.38 இலட்சம் ரூபாவை செலுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஹான் பிரதீப் விதான கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக இருந்த போது அவரது பாவனைக்காக இந்த வாகனம் வழங்கப்பட்டது.

மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் பயன்படுத்திய சொகுசு காரே இவ்வாறு சஹான் பிரதீப் விதானவிடம் கையளிக்கப்பட்டிருந்தது.

இவ்வாறு பெறப்பட்ட இந்த அதி சொகுசு கார் 2022 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் பத்தரமுல்லை பெலவத்தை இசுருபாயவிற்கு அருகில் விபத்துக்குள்ளானது.

அந்த வாகனத்திற்காக சுமார் 13 மில்லியன் ரூபா காப்புறுதிப் பலன்களாகப் பெறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அந்த வாகனத்தை திருத்துவதற்கு தேவையான எஞ்சிய பணத்தை மேல் மாகாண சபையை வழங்குமாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஹன் பிரதீப் விதான கோரிய போதிலும், எஞ்சிய பணத்தை மேல்மாகாண சபை செலுத்த மறுத்ததாக செயலாளர் தம்மிக்க கே. விஜேசிங்க தெரிவித்தார்.

Posted in Uncategorized

தென்னிலங்கைக்கு அடகு வைக்கப்பட்ட தமிழரசு கட்சியின் வீட்டு சின்னம்- ரெலோ சுரேந்திரன் காட்டம்!

தமிழ் தேசியத்தை சிங்கள வேட்பாளருக்காக விலை பேசிய தமிழரசு கட்சியின் வீட்டு சின்னத்தில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழ் கட்சிகள் ஒன்றாக போட்டியிட விரும்பவில்லை ரெலோ அமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் குருசுவாமி தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் நேற்றையதினம்(27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தமிழ் தேசியக் கூட்டமைப்பாக அனைவரும் ஒன்றிணைந்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட வருமாறு விடுத்த அழைப்பு தொடர்பில் உங்கள் நிலைப்பாடு என்ன என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கே அவர் இவ்வாறு பதிலளித்தார்.

நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் தமிழரசு கட்சி சஜித் பிரேமதாசாவுக்கு தமிழ் மக்களை வாக்களிக்குமாறு கோரிக்கை விடுத்தமை எல்லோரும் அறிந்த விடயம் .

தமிழ் மக்கள் சார்ந்து அவர்களின் கோரிக்கையை பிரதிபலிக்கும் முகமாக தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் தமிழ் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் ஒன்றிணைந்து களம் இறங்கிய போது தமிழரசு கட்சியைச் சார்ந்த சுமந்திரன், சஜித் பிரேமதாசாவுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என பகிரங்கமாக பிரச்சாரம் செய்தார்.

சஜித் பிரேமதாசாவின் தேர்தல் விஞ்ஞானத்தில் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பில் சாதகமான அம்சங்கள் இருப்பதாக கூறி தமிழ் தேசியத்தை தென்னிலங்கை கட்சிக்கு அடகு வைத்தார்.

தேர்தல் முடிவுகள் மாறி அமைந்தன சஜித் பிரேமதாசா தேர்தலில் தோற்றார் தமிழ் மக்கள் தோற்கடிக்கப்படவில்லை.

சுமந்திரன் தற்போது ஜனாதிபதி அநுர தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு தருவார் என பல்டி அடித்து பேசி வருகிறார் அது அவரின் இயல்பான குணம்.

ஆகவே, தென் இலங்கைக்கு அடகு வைக்கப்பட்ட தமிழரசு கட்சியின் வீட்டு சின்னத்தில் நாங்கள் போட்டியிட மாட்டோம் என்பதோடு தமிழ் தேசியம் சார்ந்து பயணிப்பவர்கள் சங்குச் சின்னத்தில் போட்டியிடுவார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கையை விட்டு தப்பியோட தயாராகும் அரச அதிகாரிகள்!

மதுவரி திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் வெளிநாடு செல்ல தயாராகி வருவதாக திணைக்கள உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசியல் காரணங்களுக்காக சட்டத்திற்கு முரணாக மதுபான அனுமதிப்பத்திரம் வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள அதிகாரியே நாட்டை விட்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

புதிய அரசாங்கத்தின் ஊழல் ஒழிப்பு வேலைத்திட்டத்தின் கீழ், அவர் தொடர்பான பல மோசடிகள் மற்றும் ஊழல்கள் குறித்து ஏற்கனவே கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மதுபான அனுமதிப்பத்திரங்கள் பெற்றவர்களின் பெயர் பட்டியலை வெளியிடும் அரசாங்கம்
மதுபான அனுமதிப்பத்திரங்கள் பெற்றவர்களின் பெயர் பட்டியலை வெளியிடும் அரசாங்கம்
சட்டத்திற்கு எதிராக மோசடி
கலால் சட்டத்திற்கு முரணாக மதுபான உரிமம் வழங்குவது தொடர்பாக மதுக்கடை உரிமையாளர்களால் உயர் நீதிமன்றத்தில் மதுவரி திணைக்களத்திற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த அதிகாரி தனது விருப்பத்திற்கேற்ப வரம்பற்ற மதுபான உரிமங்களை வழங்க லஞ்சம் பெற்றுள்ளதாக மதுவரி திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

போலி பாதுகாப்பு ஸ்டிக்கர்கள் மோசடி மூலம் அரசாங்கத்திற்கு வரிப்பணம் நஷ்டம் ஏற்பட்டமை தொடர்பில் எதிர்வரும் விசாரணைகளில் இருந்து தப்பிக்கவே இவ்வாறு நாட்டை விட்டு செல்ல தயாராகி வருவதாக மதுவரி திணைக்கள தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Posted in Uncategorized

பாடசாலைகளுக்கு அரசியல்வாதிகள் : பிரதமர் விடுத்த கண்டிப்பான உத்தரவு!

அரசியல்வாதிகளை தமது பாடசாலை நிகழ்வுகளுக்கு அழைப்பதை உடனடியாக நிறுத்துமாறு அனைத்து பாடசாலைகளுக்கும் கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று(26) வலியுறுத்தியுள்ளார்.

கல்வி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர், அரசியல்வாதிகளை பாடசாலைகளுக்கு அழைப்பதன் மூலம் மாணவர்களின் கல்வியில் கவனம் சிதறி பாடசாலை சூழலை அரசியலாக்கும் அபாயம் ஏற்படும் என தெரிவித்தார்.

ஆசிரியர் பணியிட வெற்றிடம்
ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் வெளிப்படைத்தன்மையின் அவசியத்தை வலியுறுத்திய அவர், பொதுமக்களின் நம்பிக்கையை கட்டியெழுப்பும் வகையில் செயல்முறை முறையாக நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மாணவர்களின் மனநலம் குறித்து உரையாற்றிய அவர், தற்போதைய தலைமுறையினர் கணிசமான சவால்களை எதிர்கொள்கின்றனர், இதில் கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடி ஆகியவை மாணவர்களிடையே மன அழுத்தத்தை அதிகரித்துள்ளன.

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு
அண்மைய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவுக்கு விரைவான மற்றும் நியாயமான தீர்வு காணப்பட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.

இந்த விடயம் தொடர்பில் சுயாதீன அறிக்கை ஒன்றின் அவசியத்தை அவர் வலியுறுத்தியதுடன், தாமதமான அனைத்து பரீட்சை பெறுபேறுகளையும் உடனடியாக வெளியிடுமாறு பரீட்சைகள் திணைக்களத்திற்கு அறிவுறுத்தினார்.

Posted in Uncategorized

பாரிய அரசியல் கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் திலித் ஜயவீர

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக பாரிய அரசியல் கூட்டணியொன்றை உருவாக்கும் முயற்சியில் திலித் ஜயவீர ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பிரபல வர்த்தகரான திலித் ஜயவீர, அண்மைக் காலத்தில் அரசியலுக்குள் காலடி எடுத்து வைத்துள்ளது மட்டுமன்றி மௌபிம ஜனதா கட்சி என்றொரு கட்சியின் தலைவராகவும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் கட்சியின் சார்பில் அவர் போட்டியிட்ட நிலையில், எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக பாரிய அரசியல் கூட்டணியொன்றை உருவாக்கி இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் போட்டியிடவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

தொடர்ச்சியான கலந்துரையாடல்
அதற்காக ஏனைய கட்சிகளில் உள்ள மக்கள் செல்வாக்கு உள்ள அரசியல்வாதிகளுடன் தொடர்ச்சியான கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், கட்சிக்கு புதிய சின்னம் ஒன்றைப் பெற்றுக் கொள்வது குறித்தும் அவர் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக அறியக் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

நாடாளுமன்றத் தேர்தலில் பெண் வேட்பாளர்கள் : தேசிய மக்கள் சக்தி தீர்மானம்

நாடாளுமன்றத் தேர்தலில் பெண் வேட்பாளர்களுக்கு முன்னுரிமை வழங்குவதற்கு தேசிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன் பிரகாரம் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் பட்டியலின் ஊடாக 22 தேர்தல் மாவட்டங்களிலும் பெண் வேட்பாளர்கள்

அதற்கு மேலதிகமாக எதிர்வரும் பொதுத்தேர்தலில் 22 தேர்தல் மாவட்டங்களிலும் மக்கள் செல்வாக்கு மிக்க வேட்பாளர்களை உள்ளடக்கி பலமான அணிகளை களமிறக்க தேசிய மக்கள் சக்தி உத்தேசித்துள்ளது.

தேசிய மக்கள் சக்தி
கடந்த ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு பின்னடைவு ஏற்பட்ட மாவட்டங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.

மேலும், அங்குள்ள வாக்காளர்களைக் கவரும் வகையில் புதிய திட்டங்களை முன்னெடுக்கவும் கட்சியின் செயற்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized