பாதுகாப்பு படை அதிகாரிகள் எனக்கூறி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய்இ தந்தை மற்றும் இரண்டு பிள்ளைகள் அடங்கலாக நான்கு பேரை வெள்ளை வான் ஒன்றில் கடத்திச் செல்லப்பட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மன்முனையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேற்று மாலை மன்முனையில் குறித்த நான்கு பேரையும் வெள்ளை வேன் ஒன்றில் கடத்திச் சென்றவர்களை மன்முனை காவற்துறையினர் சோதனையிட்டுள்ளனர்.
இதன் போது அக்கறைப்பற்றில் உள்ள இராணுவ அரண் ஒன்றுக்கு செல்வதாக வேனில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குறித்த ஆறு பேரும் பாதுகாப்பு அதிகாரிகள் என்று தெரிவித்து நான்கு பேரை கடத்திச் சென்றுள்ளமை தெரியவந்ததாக இராணுவப் பேச்சாளர் ருவான் வணிகசூரிய விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.