Hot News
Home » Uncategorized @ta » இராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் சிறைபிடிப்பு

இராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் சிறைபிடிப்பு

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள் இன்று இலங்கை கடற்படையினரால் சிறைபிடித்துச் செல்லப்பட்டதாக இந்திய ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

கச்சத்தீவு அருகே தங்கள் பாரம்பரிய இடத்தில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து செல்வது வழக்கமான நிகழ்வாகிவிட்டது.

எனவே கச்சத்தீவை மீட்டு இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று தமிழக மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள் இன்று கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர்இ தங்கள் எல்லையில் மீன்பிடித்ததாகக் கூறி 8 மீனவர்களையும் சிறைபிடித்தது.

அவர்களை தலைமன்னார் கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.

மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டது பற்றி தகவல் அறிந்ததும் அவர்களின் உறவினர்கள் கவலையடைந்துள்ளனர்.

TELO Media Team 1