Hot News
Home » செய்திகள் » 13 இல் கை வைத்தால் துறப்பேன் பதவியை போராட்டத்தைக் கைவிடேன்: அமைச்சர் ராஜித ஆவேசம்

13 இல் கை வைத்தால் துறப்பேன் பதவியை போராட்டத்தைக் கைவிடேன்: அமைச்சர் ராஜித ஆவேசம்

13ஆவது திருத்தச்சட்டத்தில் கைவைத்தால் சர்வதேசத்தின் மத்தியில் நாடு நாசமாகிவிடும். நாட்டின் எதிர்காலமே இல்லாது போய்விடும். 13இற்காக அன்று உயிர்த்தியாகம் செய்யவும் தயாராக இருந்த நான் இன்று எனது அமைச்சுப் பதவியையும் துறக்கத் தயாராக உள்ளேன். பதவி எனக்குப் பெரிதல்ல. ஏனெனில் 13இன் வெற்றிதான் நாட்டின் வெற்றி”

இவ்வாறு கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன  பகிரங்கமாகத் தெரிவித்தார்.

“தமிழர்களுக்காக கொண்டுவரப்பட்ட 13ஆவது திருத்தச்சட்ட சிறப்புரிமைகளைத் தாம் அனுபவிக்கலாம். ஆனால் அதைத் தமிழர்களுக்கு கொடுக்கமுடியாது. இதுதான் அரசியல் தார்மீகமா? எனக் கேள்வி எழுப்பிய அவர் எமக்கு வயதுதான் முதிர்கிறது ஆனால் எம் மனவலிமை இன்னும் அதிகரித்துக்கொண்டே தான் இருக்கின்றது எனவே 13ஐக் காக்கும் போராட்டத்தை நாம் தொடருவோம் என்றார்.

அரச தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

TELO Media Team 1