வெட்டுக்காயங்களுக்கு உள்ளான இலங்கை திறந்த பல்கலைக்கழக சட்டபீட தலைவர் பேராசிரியர் யசோதரா கதிர்காமத்தம்பியின் நிலை தேறிவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இதேவேளை கதிர்காமத்தம்பியை தாக்கிய மருத்துவ அதிகாரியான சிவஞானசுந்தரம் சுரேந்திரராஜா இன்னும் களுபோவில வைத்தியசாலையில் சுயநினைவின்றி இருப்பதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்
அவருக்கு செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் உடல்நிலை தேறிவிடுவார் என்றும் வைத்தியசாலை தரப்புக்கள் தெரிவித்துள்ளன