Hot News
Home » செய்திகள் » ராஜகிரிய சிறிபுர பௌத்த விகாரையில் தங்கியுள்ள மக்களுக்கு ரெலோ உதவி

ராஜகிரிய சிறிபுர பௌத்த விகாரையில் தங்கியுள்ள மக்களுக்கு ரெலோ உதவி

கடந்த சில தினங்களுக்கு முன்  பெய்த பெரு மழையில் பாரிய மண்சரிவு நிகழ்ந்து 200 க்கு மேற்பட்டவர்கள் காணமற் போயுள்ளதாக தெரிவிக்கப்படும் மாவனல்ல பிரதேசத்திலுள்ள அரக்கநாயக்க பகுதியில் ராஜகிரிய சிறிபுர பௌத்த விகாரை ஒன்றில் தற்காலிகமாக தங்கியுள்ள மக்களையும் அந்த பண்சாலை தங்கியுள்ள பௌத்த பிக்குகளையும் நேரில் சென்று பார்வையிட்ட சிவன் அறக்கட்டையின் நிறுவனரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பிரச்சாரச் செயலாளருமான கணேஸ்வரன் வேலாயுதம் அவர்களின்  உடனடித் தேவைகளுக்காக அரிசி, மா, பருப்பு, சீனி, நூடில்ஸ் அடங்கிய உலருணவுப் பொதிகளை நேற்று (19-05-2016) மாலை வழங்கினார்.

350 க்கு மேற்பட்டவர்கள் தஞ்சம் அடைந்திருக்கும் மேற்குறித்த விகாரை வளாகத்தில் ஒரேயொரு மலசலகூடம் மட்டுமே இருப்பதால் அவசரதேவையாக பத்து  தற்காலிக மலசல கூடங்களை அமைத்துத் தருமாறும் குடிதண்ணீர் பிரச்சினையும் தமக்கு இருப்பதால் 3 நீர்த் தாங்கிகளைத் தந்துதவுமாறும் அவ் விகாரையின் பிரதம பௌத்த குருவால் கணேஸ்வரன்  வேலாயுதமிடம் கோரிக்கை முன் வைக்கப்பட்டது.

அவர்கள் கேட்ட உதவிகளை சில தினங்களுக்குள் நிறைவேற்றுவதாக உறுதி அளித்த தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பிரச்சாரச் செயலாளர் வரும் ஞாயிற்றுக் கிழமை (22-05-2016) தற்காலிக மலசல கூடங்களும் நீர்த் தாங்கியும் ராஜகிரிய சிறிபுர பௌத்த விகாரைக்குக் கிடைக்க ஏற்பாடு செய்துள்ளார்.

aranayake (1) aranayake (2) aranayake (3) aranayake (4)  aranayake (6) aranayake (7) aranayake (8) aranayake (9)