மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் வந்தாறுமூலை நீர்முகப் பிள்ளையார் ஆலயத்தில் நேற்று (19-05-2006) முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடைபெற்றது. காலை 10.00 மணிக்கு பஜனையுடன் தொடங்கிய நிகழ்வு மதியம் 12.00 மணிக்கு பூசையும் அதனைத்தொடர்ந்து சுடரேற்றலும், அன்னதானமும் நடைபெற்று 2.00 மணியளவில் முடிவுற்றது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கே. துரைராசசிங்கம், பாராளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கருணாகரம்( ஜனா) , பிரசன்னா, துரைரத்தினம், நடராசா ஆகியோருடன் பெருந்திரளான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.