Hot News
Home » செய்திகள் » தேர்தல் மக்களின் கருத்தை உரிய முறையில் பிரதிபலிக்கும்

தேர்தல் மக்களின் கருத்தை உரிய முறையில் பிரதிபலிக்கும்

நீதியானதும், சுதந்திரமானதுமான தேர்தல் ஒன்றை நடாத்தி, மக்களின் கருத்தை உரிய முறையில் வெளிப்படுத்த தேர்தல்கள் ஆணைக்குழு தயாராகவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல் வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டப்பட்டதன் பின்னரே தேர்தல் திகதியை அறிவிக்க முடியும். எதிர்வரும் ஜனவரி மாதத்தில் தேர்தல் ஒன்றை எதிர்பார்க்க முடியும் என தான் நம்புவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

ஹம்பாந்தோட்டயில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.