Hot News
Home » செய்திகள் » முஸ்லிம் அரசியல் தலைமைகள் ஐ.நா. சிறப்புப் பிரதிநிதியுடன் சந்திப்பு

முஸ்லிம் அரசியல் தலைமைகள் ஐ.நா. சிறப்புப் பிரதிநிதியுடன் சந்திப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையிடும் மனித உரிமை செயற்பாட்டாளர் கிளெமென்ற் நயாலெட்சோசி வூல் தலைமையிலான குழுவினரை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்து கலந்துரையாடினர்.


இச்சந்திப்பு பாராளுமன்றத்திலுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக் காரியாலயத்தில் நேற்று (24) இடம்பெற்றுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எச்.எம். பௌசி, றிஷாத் பதியுதீன், எச்.எம்.எம். ஹரீஸ், பைசால் காசிம், அலிஸாஹிர் மௌலானா, எம்.ஐ.எம். மன்சூர், எம்.எஸ். தௌபீக், ஏ.எல்.எம். நசீர், அப்துல்லாஹ் மஹ்ரூப் ஆகியோர் கலந்துகொண்டனர்.


ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் எதிர்வரும் 2020 ஜூன் மாதம் மனித உரிமைகள் பேரவையின் 44ஆவது அமர்வின்போது தனது இலங்கை வருகை குறித்த விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.