Hot News
Home » செய்திகள் » வெள்ளை வானில் வந்தோரால் வியாபாரி கடத்தல்

வெள்ளை வானில் வந்தோரால் வியாபாரி கடத்தல்

பொரளபனாதர வாராந்த சந்தைக்கு அருகில் வியாபாரி ஒருவரை வெள்ளை வானில் வந்து குழு ஒன்று கடத்திச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று காலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக ஊருபொக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொரளபனாதர, தெவிலியவத்த பகுதியை சேர்ந்த சுரங்க எதிரிசிங்க எனும் வியாபாரியே இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டுள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

இன்று காலை பிள்ளைகளை பாடசாலைக்கு விட்டு செல்வதற்காக சென்ற சந்தர்ப்பத்தில் பொரளபனாதர வாராந்த சந்தைக்கு அருகில் வைத்து கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.

குறித்த நபரை கடத்திச் சென்ற வான், மாத்தறை திசையில் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் ஊருபொக்க பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளனர்.