Hot News
Home » தற்போதைய செய்திகள் » இலங்கை ஆசிரியர் சங்கம் சுகவீன விடுமுறைஒ போராட்டம் செய்யவுள்ளதாக அறிவிப்பு

இலங்கை ஆசிரியர் சங்கம் சுகவீன விடுமுறைஒ போராட்டம் செய்யவுள்ளதாக அறிவிப்பு

எதிர்வரும் வியாழக்கிழமையும், வெள்ளிக்கிழமையும் சுகவீன விடுமுறை போராட்டத்தை நடத்தப்போவதாக இலங்கை ஆசிரியர் மற்றும் அதிபர்கள் சேவை சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமக்கிடையே நிலவும் சம்பள முரண்பாட்டை தீர்க்கக்கோரியே இந்த போராட்டம் நடத்தப்படவுள்ளது.

இந்நிலையில் குறித்த இரண்டு நாட்களிலும் ஆசிரியர்களும், அதிபர்களும் சுகவீனம் என்று அறிவித்துவிட்டு தமது கடமைகளில் இருந்து விலகியிருக்க உள்ளதாக சங்கத்தின் செயலாளர் மகிந்த ஜயசிங்க இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அத்துடன் கோட்டை தொடரூந்து நிலையத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றும் நடத்தப்படவுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தப்போராட்டத்துக்கு இலங்கை ஆசிரியர் சங்கமும் தமது ஆதரவை வெளியிட்டுள்ளது.