Hot News
Home » செய்திகள் » மக்கள் விரும்பினால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன்

மக்கள் விரும்பினால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன்

மக்கள் விரும்பினால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன் என இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

மக்கள் என்ன விரும்புகின்றார்கள் என்பதே நான் தேர்தலில் போட்டியிடுவதை தீர்மானிக்கும், இதுவரை நடந்தது எதுவும் திட்டமிட்டு நடந்ததில்லை மக்கள் ஆணையே முக்கியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

விதி என்னை இவ்வளவு தூரத்திற்கு கொண்டுவந்துள்ளது விதி அனைத்தையும் தீர்மானிக்கும் என நான் நம்புகின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நான் பல பதவிகளை வகித்துள்ளேன் அவ்வேளையில் மக்களிற்கு நீதி வழங்க முயன்றுள்ளேன். இன்னொரு முறை மக்களிற்கு பணியாற்றும் சந்தர்ப்பம் கிடைத்தால் மக்களிற்கு நீதி வழங்குவேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடும் மக்களுமே முக்கியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.