இலங்கை – இந்திய இரு தரப்பு புரிந்துணர்வு இணக்கப்படி தமிழகத்தின் 30 மீனவ மோட்டார் படகுகளை இலங்கை விடுவித்துள்ளது.
தமிழக அரசாங்கம் இதனை அறிவித்துள்ளது.
இதனை அடுத்து மாற்று அறிவிப்பாக தமிழக அரசாங்கமும் இலங்கை மீனவர்களின் 11 படகுகளை விடுவிக்க உத்தரவிட்டுள்ளது.
எதிர்வரும் 27 ம் திகதி இடம்பெறவுள்ள இரண்டு தரப்பு மீனவர்களின் சந்திப்புக்கு வழிவகுக்கும் வகையிலேயே இந்த நடவடிக்கைகள் இரண்டு அரசாங்கங்களினால் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு கட்டமாக இதுவரை 233 இந்திய மீனவர்களும் 130 இலங்கை மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.