வட மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரனுக்கு இரண்டு தடவைகள் சுவிஸ் வீசா மறுக்கப்பட்டதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
சுவிட்சர்லாந்து பயணம் செய்வதற்காக இரண்டு தடவைகள் விண்ணப்பித்த போதிலும் வீசா வழங்கப்படவில்லை.
இதற்கு முன்னதாக அனந்தி அரசியல் தஞ்சம் கோரியிருந்தார்.
2013ம் ஆண்டு மனித உரிமைப் பேரவை மாநாட்டில் பங்கேற்கபதற்கு முயற்சித்திருந்தார்.
அரச சார்பற்ற நிறுவனமொன்றின் ஊடாக இவ்வாறு சுவிட்சர்லாந்து செல்ல முயற்சித்தார்.
இதேவேளை, இம்முறை மனித உரிமைப் பேரவை மாநாட்டில் அனந்தி சசிதரன் பங்கேற்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.
அனந்தி ஏற்கனவே சுவிட்சர்லாந்திற்கு பயணம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது,
இந்த நிலையில், புலிகளுக்கு ஆதரவான புலம்பெயர் அமைப்பு ஒன்று அனந்திக்கு மாநாட்டில் உரையாற்ற வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.