போர்க் குற்றச் செயல்கள் குற்றச்சாட்டுக்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச லண்டனில் விளக்கம் அளிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் மார்ச் மாதம் ஜனாதிபதி லண்டனுக்கு விஜயம் செய்ய உள்ளார்.
பொதுநலவாய நாடுகள் தினத்தை முன்னிட்டு நடைபெறும் நிகழ்வில் அவர் பங்கேற்க உள்ளார்.
என்ன காரணத்திற்காக இலங்கை மீது சில தரப்பினர் போர்க் குற்றச்செயல் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றார்கள் என்பது பற்றி விளக்க உள்ளார்.
அரச தலைவர்கள் உள்ளிட்ட 300 முக்கிய பிரமுகர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்க உள்ளனர்.
இலங்கைக்கு எதிராக குற்றம் சுமத்துவோர் பயங்கரவாத நடவடிக்கைகளில் தொடர்புபட்டுள்ள விதம் பற்றி உலகத் தலைவர்களுக்கு ஜனாதிபதி விளக்குவார் என சிங்களப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.