Hot News
Home » செய்திகள் » ஐ.தே.கட்சியின் எம்.பிக்கள் மீது தாக்குதல் நடத்திய நான்கு பேர் கைது

ஐ.தே.கட்சியின் எம்.பிக்கள் மீது தாக்குதல் நடத்திய நான்கு பேர் கைது

அம்பாந்தோட்டையில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில், 4 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மத்தள விமானம் மற்றும் துறைமுகத்திற்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து விசாரணை நடத்திய விசேட பொலிஸ் குழு இவர்களை கைது செய்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் துறைமுகம் மற்றும் விமான நிலைய அதிகாரிகளிடம் அனுமதியை பெற்றே அங்கு சென்றிருந்தனர்.

அஜித் பீ. பெரேரா, எரான் விக்ரமரத்ன உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதே தாக்குதல் நடத்தப்பட்டதுடன், ஐக்கிய தேசியக் கட்சி அம்பாந்தோட்டை மேயர் ஏராஜட பெர்ணான்டோ மீது குற்றம் சுமத்தியுள்ளது.

அதேவேளை மேற்படி தாக்குதல் சம்பவத்தை கண்டித்து ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும், மாகாண சபை உறுப்பினர்களும் கடந்த சனிக்கிழமை அம்பாந்தோட்டை பொலிஸ் நிலையத்திற்கு எதிரில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்.

TELO Media Team 1