Hot News
Home » செய்திகள் » பொத்துஹர ரயில் விபத்து! 168 மில்லியன் ரூபா நட்டம்

பொத்துஹர ரயில் விபத்து! 168 மில்லியன் ரூபா நட்டம்

குருநாகல் பொத்துஹர ரயில் நிலையத்தில் வடபகுதி இரண்டு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ரயில்வே திணைக்களத்திற்கு 168 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
பொத்துஹர ரயில் விபத்து தொடர்பிலான இறுதி விசாரணை அறிக்கை கிடைத்தவுடன், சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த விபத்து தொடர்பிலான விசாரணைகளுக்காக இரண்டு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது. முதலாவது குழு பொத்துஹர பகுதிக்குச் சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் பி.ஏ.பி.ஆரியரத்ன தெரிவித்தார்.

ரயில்வே திணைக்களத்துக்கு சுமார் 17 கோடி ரூபா நட்டத்தை ஏற்படுத்திய இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் இதுவரை 05 ஊழியர்கள் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

TELO Media Team 1