Hot News
Home » செய்திகள் » ஐக்கிய நாடுகளுடன் இணங்கி செல்லுமாறு பிரித்தானியா, தொடர்ந்தும் இலங்கையை வலியுறுத்துகிறது!

ஐக்கிய நாடுகளுடன் இணங்கி செல்லுமாறு பிரித்தானியா, தொடர்ந்தும் இலங்கையை வலியுறுத்துகிறது!

ஐக்கிய நாடுகள் யோசனையுடன் இணங்கிச் செல்லுமாறு தாம் இலங்கை அரசாங்கத்தை தொடர்ந்தும் வலியுறுத்தி வருவதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவை பொறுத்தவரை இலங்கையில் ஐக்கிய நாடுகளின் யோசனை நடைமுறைப்படுத்தப்படுவதற்காக பங்காளி நாடுகளுடன் இணைந்து செயற்பட எப்போதுமே தயாராக உள்ளளதாக பிரித்தானிய வெளியுறவு அலுவலக அமைச்சர் ஹியுகோ ஸ்வைர் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் அவர் இதனை நேற்று தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஐக்கிய நாடுகளின் யோசனை தொடர்பில் ஜெனீவாவில் அதிகாரிகள் தொடர்ந்தும் கலந்துரையாடி வருவதாகவும் ஸ்வைர் குறிப்பிட்டுள்ளார்.

TELO Media Team 1